பதற்றம்!
ஆங்கிலத்தில்
இதனை Anxiety
என்று
குறிப்பிடுகின்றார்கள்.
அடுத்து
என்ன நடந்திடுமோ என்ற பயம் கலந்த அச்சம்.
இது
ஒரு மனித பலவீனம்.
இதனை
நாம் வென்றாக வேண்டும்.
தனி
மனித வாழ்விலும் சரி,
குடும்ப
வாழ்விலும் சரி,
தொழில்
துறை அல்லது பணியிடம் ஆனாலும் சரி,
தொண்டனாக
இருக்கும் போதும் சரி,
தலைவர்
பொறுப்பில் இருக்கும் போதும் சரி –
இந்த
பதற்றம் கூடவே கூடாது.
எந்த
ஒரு செயலையும் நாம் அழகே செய்து முடித்திட நிதானம் தேவை.
அவசரம்
கூடாது.
பதற்றம்
எந்த ஒரு காரியத்தையும் கெடுத்து விடும்.
பதறாத
காரியம் சிதறாது என்பது முதுமொழி.
சாதாரண
சூழலில் யாரும் பதற்றம் அடைய மாட்டார்கள் தான்.
ஆனால்
சில அழுத்தம் தரும் சூழல்கள் (stressful
situations) பதற்றத்தைக்
கொண்டு வரலாம்.
அந்த
சமயங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதே நமது ஆளுமையை (personality)
நிர்ணயிக்கும்.
மாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு.
பத்ர்
போருக்கு முன்.
நபியவர்கள்
பதற்றப் பட்டார்களா?
இல்லையே!
ஏன்?
எந்த
ஒரு போரின் போதும் சரி நபியவர்கள் பதற்றப்பட்டதே கிடையாது.
அரபுலகம்
முழுவதுமே திரண்டு வந்து மதீனாவை முற்றுகையிட்டு அழித்திட வந்த அகழ் யுத்தத்தின்
போதும் நபியவர்கள் பதற்றம் அடைந்திடவில்லை.
நபித்தோழர்களும்
பதற்றம் அடைந்திடவில்லை.
அவ்விடத்தில்
முஃமின்கள் (பெருஞ்)
சோதனைக்கு
உள்ளாக்கப்பட்டு,
இன்னும்
கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள்.
(33: 11)
அல்லாஹ்வின்
மீதும்,
இறுதி
நாளின் மீதும் ஆதரவு வைத்து,
அல்லாஹ்வை
அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி
உங்களுக்கு இருக்கிறது.
அன்றியும்,
முஃமின்கள்
எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது,
“இது
தான்,
அல்லாஹ்வும்
அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது;
அல்லாஹ்வும்
அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்”
என்று
கூறினார்கள்.
இன்னும்
அது அவர்களுடைய ஈமானையும்,
(இறைவனுக்கு)
முற்றிலும்
வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.
(33: 21 – 22)
பொதுவாகச்
சொல்வதென்றால் –
எல்லா
இறைத்தூதர்களின் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட சூழல்கள் நிறைந்தே காணப்படுகின்றன.
இப்படிப்பட்ட
சூழல்களில் வைத்துத் தான் அல்லாஹு தஆலா இறைத்தூதர்களுக்கும் இறை நம்பிக்கை கொண்ட
அந்த நபித் தோழர்களுக்கும் “பயிற்சி”
அளித்திருக்கின்றான்.
ஹிஜ்ரத்தின்
போது தவ்ர் குகையில் அண்ணலாரும் அபூ பக்ர் சித்தீக் அவர்களும் தங்கியிருந்த சமயம்
பதற்றத்திற்குரியது தான்.
“பயப்பட
வேண்டாம்!
அல்லாஹ்
நம்முடன் இருக்கின்றான்!”
என்றார்கள்
நபியவர்கள்.
“தொழுகைக்கு
இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள்.
நடந்தே
வாருங்கள்.
நிதானத்தைக்
கடைப்பிடியுங்கள்.
கிடைத்ததைத்
தொழுங்கள்.
தவறியதைப்
பூர்த்தி செய்யுங்கள்.”
(புஹாரி
)
இவ்வாறு
நிதானமாக ஒவ்வொரு நாளும் நாம் பெற்றுக் கொள்கின்ற பயிற்சி,
நமது
வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் நமக்கு நிச்சயம் உதவும்.
“தொழுகையின்
பக்கம் வாருங்கள்!
தொழுகையின்
பக்கம் வாருங்கள்!
“வெற்றியின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்!
“வெற்றியின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்!