Wednesday, December 14, 2011

நபிமார்கள் கேட்ட துஆக்கள்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு...


நபிமார்கள் கேட்ட துஆக்கள்:

··∙ ∙·
º∙01. துஆக்கள் ஏற்கப்பட ∙º01º
∙நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ )∙

·

"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை)
ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும்
அறிபவனாகவும் இருக்கின்றாய்". எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை)
மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா
அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (அல்குர்ஆன் 2: 127-128)


∙º02. ஈருலக நன்மை பெற º01º∙
∙நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ )∙

·

"இறைவா! எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2: 201)


∙º03. கல்வி ஞானம் பெற º01º∙
∙நபி மூஸா அலைஹிஸ்ஸலாம அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِي )∙

·
"அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்." (அல்குர்ஆன் 2:67)




∙º04. பாவமன்னிப்புப் பெற º01º∙
∙நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ )∙

·
"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் -
நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்;டால், நிச்சயமாக நாங்கள்
நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" (அல்குர்ஆன் 7: 23)



∙º05. படைத்தவனிடம் சரணடைந்திட º01º∙
∙நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَاْ مِنَ الْمُشْرِكِينَ )∙

·

"வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக
என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக - (இணைவைப்
போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்" (அல்குர்ஆன் 6: 79)


∙º06. விசாலமான உணவைப் பெற º01º∙
∙நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙(
رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاء تَكُونُ لَنَا
عِيداً لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ وَارْزُقْنَا وَأَنتَ
خَيْرُ الرَّازِقِينَ )∙

·
"அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை
இறக்குவாயாக. அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின்
வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும்
இருக்கும். இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக. நீயே
உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்" (அல்குர்ஆன் 5: 114)



∙º07. குழந்தைப்பேறு பெற º01º∙
∙நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء )∙

·
"இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக்
கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக
இருக்கின்றாய்." (அல்குர்ஆன் 3: 38)



∙º08. இறைவனின் தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெற º01º∙
∙நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙(
نتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الْغَافِرِينَ
وَاكْتُبْ لَنَا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ إِنَّا
هُدْنَا إِلَيْكَ )∙

·
"நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு
அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான்
மிக்க மேன்மையானவன்."

''இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு
(அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே
முன்னோக்குகிறோம்" (அல்குர்ஆன் 7: 155, 156)


∙º09. சோதனையின்போது பொறுமை ஏற்பட º01º∙
∙நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ )∙

·
"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்)
பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை
ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" (அல்குர்ஆன் 7:
126)



∙º10. கவலைகள் தீர º01º∙
∙நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( حَسْبِيَ اللَّهُ لا إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ )∙

·
"எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன்
அவனையன்றி (வேறுயாரும்) இல்லை அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை
கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி."
(அல்குர்ஆன் 9: 129)



∙º11. மாற்று சமயத்தவர்களுடன் நல்லுறவு ஏற்பட º01º∙
∙நபி ஷுஐபு அலைஹிஸ்ஸலாம அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ )∙

·
"எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே
நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும்
மேலானவன்." (அல்குர்ஆன் 7: 89)



∙º12. சகோதரருக்கு துஆ º01º∙
∙நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَبِّ اغْفِرْ لِي وَلأَخِي وَأَدْخِلْنَا فِي رَحْمَتِكَ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ )∙

·
"என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன்
ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே
கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்." (அல்குர்ஆன் 7: 151)



∙º13. துஆவில் தவறுகள் நடக்காமல் இருக்க º01º∙
∙நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙(
رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ
وَإِلاَّ تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُن مِّنَ الْخَاسِرِينَ )∙

·
" என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை
உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ
என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான்
ஆகிவிடுவேன்." (அல்குர்ஆன் 11: 47)



∙º14. அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற º01º∙
∙நபி ஹூ த் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙(
إِنِّي تَوَكَّلْتُ عَلَى اللَّهِ رَبِّي وَرَبِّكُم مَّا مِن دَابَّةٍ
إِلاَّ هُوَ آخِذٌ بِنَاصِيَتِهَا إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ
)∙

·
"நிச்சயமாக நான்> எனக்கும் உங்களுக்கு இறைவனாக இருக்கும்
அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும்
அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என்
இறைவன் நேரான வழியிலிருக்கின்றான்." (அல்குர்ஆன் 11: 56)



∙º15. அல்லாஹ்வின் உதவி பெற º01º∙
∙நபி ஷுஐபு அலைஹிஸ்ஸலாம அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( وَمَا تَوْفِيقِي إِلاَّ بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ )∙

·
"மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது
வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே
மீளுகிறேன்." (அல்குர்ஆன் 11: 88)



∙º16. துன்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெற º01º∙
∙நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( فَاللَّهُ خَيْرٌ حَافِظًا وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ )∙

·
"பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்" (அல்குர்ஆன் 12: 64)



∙º17. அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை வலுப்பட º01º∙
∙நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( عَلَيْهِ تَوَكَّلْتُ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ )∙

·
"அவன் மீதே நான் முழமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே,
முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழமையாக நம்பிக்கை வைப்பவர்கள்
அவன் மீதே முழு நம்பிக்கைவைப்பார்களாக!" (அல்குர்ஆன் 12: 67)



∙º18. சஞ்சலம் நீங்கிட º01º∙
∙நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ )∙

·
''என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்’. (அல்குர்ஆன் 12: 86)



∙º19. மறுமையில் நல்லடியார்களுடன் எழுப்பப் பட º01º∙
∙நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙(
فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ أَنتَ وَلِيِّي فِي الدُّنْيَا
وَالآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ )∙

·
"வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும்
நீயே என் பாதுகாவலன்; முஸ்லீமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும்
நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில்
என்னைச் சேர்த்திடுவாயாக!" (அல்குர்ஆன் 12: 101)



∙º20. குழப்பங்களில் இருந்து நேர்வழி பெற º01º∙
∙நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاء ∙



∙رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء ∙


∙رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ ∙·

"நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.".
(''என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும்,
என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய
பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!"
''எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும்,
முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக."
(அல்குர்ஆன் 14: 39, 40, 41)


∙º21. நெஞ்சம் விரிவடைய º01º∙
∙நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَبِّ اشْرَحْ لِي صَدْرِي ∙

∙وَيَسِّرْ لِي أَمْرِي )∙·

"இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி)
விரிவாக்கி தருவாயாக! என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!"
(அல்குர்ஆன் 20: 25, 26)


∙º22. கல்வி அறிவுப் பெருக º01º∙
∙நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَّبِّ زِدْنِي عِلْمًا )∙

·
"இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!" (அல்குர்ஆன் 20: 114)



∙º23. நோய் குணமடைய º01º∙
∙நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ )∙

·
"நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது;
(இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக
இருக்கின்றாய்." (அல்குர்ஆன் 21: 83)



∙º24. துன்பத்திலிருந்து விடுபட º01º∙
∙நபி யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( لّا إِلَهَ إِلاَّ أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ )∙

·
"உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும்
தூய்மையானவன்; நிச்சயமக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்."
(அல்குர்ஆன் 21: 87)



∙º25. கோரிக்கை ஏற்கப்பட º01º∙
∙நபி இப்ராஹீம்; அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللَّهِ مِن شَيْءٍ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء )∙

·
"எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள்
பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் ப+மியிலோ, மேலும்
வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை."
(அல்குர்ஆன் 14: 38)



∙º26. குழந்தை பாக்கியம் பெற º01º∙
∙நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَبِّ لا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ )∙

·
"என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன." (அல்குர்ஆன் 21: 89)



∙º27. நிராகரிப்பவர்களுக்க எதிராக நாம் வெற்றி பெற º01º∙
∙நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَبِّ احْكُم بِالْحَقِّ وَرَبُّنَا الرَّحْمَنُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ )∙

·
"என் இறைவா! சத்தியத் தீர்ப்பு வழங்குவாயாக! என்று கூறினார்.
எங்கள் இறைவனோ அறவற்ற அருளாளன். நீங்கள் வர்ணிப்பதற்கு எதிராக உதவி
தேடப்படுபவன்." (அல்குர்ஆன் 21: 112)



∙º28. தங்குகின்ற இடத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்பட º01º∙
∙நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَّبِّ أَنزِلْنِي مُنزَلا مُّبَارَكًا وَأَنتَ خَيْرُ الْمُنزِلِينَ )∙

·
"இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள - இறங்கும் தலத்தில்
என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்தரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க
மேலானவன்." (அல்குர்ஆன் 23: 29)



∙º29. இம்மை மறுமை உயர்பதவி பெற º01º∙
∙நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ ∙



∙وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الآخِرِينَ ∙

∙وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ ∙

∙وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ ∙

∙وَلا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ ∙

∙يَوْمَ لا يَنفَعُ مَالٌ وَلا بَنُونَ ∙


∙إِلاَّ مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ ∙·

''இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!""
''இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!"
''இன்னும், பாக்கியம் நிறைந்த சவனபதியின் வாரிஸ
{க்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!"

''என் தந்தையாரையும் மன்னிப்பாயாக! நிச்சயமாக, அவர் வழி கெட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்.""
''இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக் குள்ளாக்காதிருப்பாயாக!"
''அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.""
''எவரொருவர் பரிசத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்)." (அல்குர்ஆன் 26: 83 -89)


∙º30. தீய செயல்களிலிருந்து பாதுகாப்புப் பெற º01º∙
∙நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ )∙

·
''என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!" (அல்குர்ஆன் 26: 169)



∙º31. நற்செயல்கள் அதிகமாக º01º∙
∙நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙(
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ
وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي
بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ )∙

·
"என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள
உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும்
விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம்
கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!"
(அல்குர்ஆன் 27: 19)



∙º32. அநியாயக்காரர்களிடம் இருந்து பாதுகாப்புப் பெற º01º∙
∙நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي ∙



∙قَالَ رَبِّ بِمَا أَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ أَكُونَ ظَهِيرًا لِّلْمُجْرِمِينَ ∙


∙رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ )∙·
"என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!"

''என் இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்"
''என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!"" (அல்குர்ஆன் 28: 16, 17, 21)


∙º33. வலிமை ஏற்பட º01º∙
∙நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ )∙

·
"என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்" (அல்குர்ஆன் 28: 24)



∙º34. அல்லாஹ்வின் உதவி பெற º01º∙
∙நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ )∙

·
"என் இறைவனே! குழப்பம் செய்யும் இற்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!" (அல்குர்ஆன் 29: 30)



∙º35. சாலிஹான குழந்தை பிறக்க º01º∙
∙நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ )∙

·
"என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக" (அல்குர்ஆன் 37: 100)



∙º36. மறுமையில் அதிகமான நற்கூலி பெற º01º∙
∙நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ ∙



∙وَسَلامٌ عَلَى الْمُرْسَلِينَ ∙


∙وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ )∙·

"அவர்கள் வர்ணிப்பதை விட்டும் கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.
மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீம் (இன்னும் புகழ் அனைத்தும்
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்)." (அல்குர்ஆன் 37: 180,
181, 182)


∙º37. பிரயாண துஆ º01º∙
∙நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ ∙



∙وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ )∙


·
"இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசத்தமானவன்.

'மேலும், நிச்சயமாக நாம் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள்." (அல்குர்ஆன் 43: 13, 14)


∙º38. இறை நம்பிக்கை அதிகமாக º01º∙
∙நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( ذَلِكُمُ اللَّهُ رَبِّي عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ )∙
·· ···

"அவன் தான் அல்லாஹ் - என்னுடைய இறைவன்; அவன் மீதே நான்
முற்றும் நம்பிக்கை வைக்கிறேன்; அன்றியும் அவன் பக்கமே நான்
திரும்புகிறேன்." (அல்குர்ஆன் 42: 10)
· ·


∙º39. நிராகரிப்பவர்களின் பிடியில் சிக்காமல் இருக்க º01º∙
∙நபி இப்ராஹீம்; அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ∙
·
∙( رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ ∙

∙رَبَّنَا لا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ )∙·
"எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,"

''எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப்
பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக!
நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்"" (அல்குர்ஆன் 60: 4,
5)
· ·

º∙40. விசுவாசிகள் அனைவரும் மன்னிக்கப் பெற ∙ º01º
·
∙( رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ )∙

·
''என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில்
நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும்>
முஃமினான பெண்களுக்கும்,·
··நீ மன்னிப்பளிப்பாயாக! (அல்குர்ஆன் 71: 28)··
·· ··

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.